ஜெய் ஸ்ரீ ராம்

ஓம் ஆஞ்சநேயாய நம...ஓம் மகாவீராய நம...ஓம் ராம பக்தாய நம

Monday, May 14, 2012

தமிழர்களின்- காமசூத்திரம்


தமிழர்களின்- காமசூத்திரம்



உலகெல்லாம் சிவசக்தி ரூபத்தின் வெளிபாடு...
ஆண் பெண் மனம் தேடும் புது இன்ப புறப்பாடு..
.

இருள் சூழும் நேரத்தில் மனம் ஈர்க்கும் நிலைபாடு ..
புது உயிர் தர துடிக்கும் இரு உயிரும் துடிபோடு..

காமனின் கணை தேடும் ரவிதேவி அங்கம் தேடி...
ரகசிய ராத்திரியில் ராகங்கள் பல கோடி...

உடல் கொள்ளும் வெப்பத்தில்
உதிரம் கொதிக்கும் ...உணர்ச்சிகள் வெடிக்கும் .....

அகிலம் உணர அர்த்தம் தரும் சேர்க்கை அர்த்தநாரி
ஆண் பெண் வடிவம் ஒத்த உடல் சேர முதல் படி ...



கோவிலின் சுவர் சொல்லும் காமத்தின் கலாசாரம் ...
கலையாவும் உள்ளடக்கும் கண்ணியமான நிலையாவும்....

ஆழநிலை தியானம் செய்யும் ஞானி கூட இடறி போகும் ....
ஆத்மா பந்தம் இந்த அழகான காமசூத்திரம்...

இரு உயிர் தேடும் ஒரு நிலை காமம் ......  அதில் ஏது பேதம்.





ஆண் பெண் மணநாளில் மணம் சேரும் மங்கள பொழுதில் ....

சுபயோகா நேரம்  ஒதுக்கும் உடல் சேர ராத்திரி பொழுதில் ... 
வெண்பனி போய் சேரும் சிற்ப்பிகுள் முத்தாய் ...
சிற்பியின் இமை திறக்கும் உட்கொள்ளும் நோக்காய்...

உதிரத்தின் கலப்போடு உருவாகும் புது சிறை ...
உயிர்  வாழ பெண் மடிதான் முறையான கருவறை ...



                                  இது தானே அண்டத்தின் பரம்பிரம்ம நிலையாம் .... 
                                  தெய்வீக கலையாம் ...........   

            உலக நோயாம் ஏயட்சுக்கு(AIDS-HIV)
           ஒருவனுக்கு ஒருத்தி .. என்னும் மருந்து கண்டெடுத்து
            உலகிற்கு நாகரீகம் ... கற்ப்பித்த நம் தமிழர்களின் பாதையில்
            நாமும் பயணிப்போம் ...

                                                                                                               சுந்தரகணேசன் ஐ
                                                                                                               (தமிழ் மாணவன் )

No comments:

Post a Comment